யாழ்ப்பாணம் – அச்சுவேலி, புத்தூர் சந்தியில் நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் பிரவேசித்த சிலர் அதன் உரிமையாளர் மீது நேற்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





