4 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி!

மொரட்டுவ, லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 4வது மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply