அவசரமாக நடந்த திகாவின் புதிய நியமனம்!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளராக சண்.பிரபாகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமன வைபவத்தில் திகாம்பரம் மற்றும் உதயா, சோ ஸ்ரீதரன் என்போர் முக்கியஸ்தர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி,  ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த சண்.பிரபாகரன் கடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்து களுத்துறை மாவட்டத்தின்  வேட்பாளராக போட்டியிட்டார்.

மேலும் அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த நியமனம் அவசரமாக நடந்ததன் காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Leave a Reply