வவுனியாவில் மருந்துகளின் விலையேற்றத்திற்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள்!

வவுனியாவில் இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்க என தெரிவித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (05.12.2022) காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெண்களின் சுகாதார உரிமையினை உறுதி செய்தல் , சுகாதார உரிமைகள் மனித உரிமைகள் , நமது வாழ்க்கை நமது உரிமைகள் போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்
30நிமிடங்கள் வரை முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் 60க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply