தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான ‘மண்டோஸ்’ சூறாவளியால் நாட்டில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 1,302 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,302 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடக) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இந்த சூறாவளியின் தாக்கம் நேற்று (8) மற்றும் இன்று (9) தீவின் பல பகுதிகளை பாதித்துள்ளது.
இதனால் ஊவா மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 723 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், அந்த மாகாணத்தில் 916 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.