தாழமுக்கத்தால் ஏற்பட்ட குளிரான காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக மாடு வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .
இவ்வாறு உயிரிழந்த மாடுகள் பட்டிகள், காட்டுப் பகுதிகளில் கிடப்பதை காணமுடிகின்றது.
இன்னும் பல மாடுகள் உயிருக்கு போராடிய நிலையில் குளிரான காலநிலையால் எழுந்து நடக்க முடியாமல் காணப்படுகின்றது.


