சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மகளீர் அபிவிருத்தி நிலையத்தினரின் ஏற்பாட்டில் பால் நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்திட்டத்தின் நிறைவு தினம் இன்று யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,
பால் நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்திட்டத்தின் மூலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக சமூகமாக அனைவரும் இனைந்து செயற்படவேண்டும் என்பதே மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.
ஏனென்றால் இது பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே இதில் பெண்கள் மட்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதென்பது முடியாத விடயம். பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஆண்களினால் நிகழ்த்தப்படுவதாக இருப்பதனால் ஆண்களும் இது குறித்ததான விழிப்புணர்வோடு பெண்களை எப்போதும் கௌரவத்தோடு நடத்துபவர்களாக காணப்பட வேண்டும்.
இன்றைய தினம் சர்வதேச மனித உரிமைகள் தினமாக காணப்படுகின்றது. அந்த வேளை பெண்களுடைய உரிமைகள் என்ற அடிப்படையிலே பெண்களும் சமத்துவமான நிலையில் ஆண்களோடு சரி சமமாக பல்வேறு துறைகளில் பரிணமிக்கின்ற பெண்களாகிய அவர்கள் கௌரவத்தோடு நடாத்த வேண்டியது சமூகத்தின் மிக முக்கிய பொறுப்பாக காணப்படுகின்றது.
எனவே இது தனிப்பட ஒருபால் மட்டும் தனித்து சாதிப்பதை விட அணைவரும் ஒன்றாக இணைந்து இந்த செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலமாக ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்கலாம்.
மற்றும் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு வேண்டியதான கௌரவத்தையும் மரியாதையும் குடுக்கும் விடயங்கள் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும் அது குறித்து குடும்ப உறுப்பினர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.