கடும் குளிரால் பறிபோன குழந்தைகளின் உயிர்..!

இலங்கையை பாதித்துள்ள அதிக குளிருடனான வானிலையினால் கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் – ராஜாஎல பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு குழந்தைகளும் (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான வானிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் விசேட மருத்துவர் கேட்டுக்கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *