பொறுமையாக இருக்கும் மஹிந்த – எதற்கும் தயார் என்றும் அறிவிப்பு

தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில் அதுவரை பொறுமை காக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேரரை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று வந்தால் அதற்கு அனைத்து சந்தர்ப்பத்திலும் தயாராகவே உள்ளோம் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டம் மிகவும் சிறப்பான ஒன்றாகும். தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ளது.

இதனால் மக்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *