அடுத்த வருடம் மருந்து தட்டுப்பாடு குறைவடையக்கூடுமா? அமைச்சரின் அறிவிப்பு

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கடந்த 11ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவினால் இலங்கைக்கு வழங்கக்கடும் சுகாதார ஒத்துழைப்புகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *