யாழ், போராளிகள் நலன்புரி சங்கத்தின் முதலாவது சந்திப்பு இன்று !

யாழ், மாவட்ட  போராளிகள் நலன்புரி சங்கத்தின் 1வது சந்திப்பு (18.12.2022 ) இன்று யாழ் நகரில் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், முதற்கட்டமாக எதிர்காலத்தில் போராளிகளின் நலன் கருதி  சிறு சிறு தொழில் பட்டைகளை உருவாக்கி வேலைகளை கொடுப்பதற்கான திட்டமிடல்,தென்னம் பொச்சிலிருந்து தும்புகளை எடுத்து கொழும்பிற்கு ஏற்றுமதி செய்தல் மற்றும் நிறுவனத்திற்கென வங்கி கணக்கினை திறத்தல்  போன்ற விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் கைத்தொழில் ரீதியான  பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும் இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட  போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் தனுஜன்,பொருளார் .செழியன் உபதலைவர். ரமேஸ் மற்றும்  பாவரசன்,பிரபாகரன்,குயிலன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply