சுதந்திரதினத்தன்று முற்றுகையிடப்படவுள்ள கொழும்பு! வெளியான திட்டம்

சுதந்திரதினத்தன்று கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை கண்டித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

Leave a Reply