இலங்கைக்கு IMF நிவாரணத்திற்கு மேலதிகமாக உலக வங்கியிடமிருந்தும் நிதி! SamugamMedia

 

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு மேலதிகமாக, உலக வங்கி 500 முதல் 1500 மில்லியன் டொலர் வரையிலான தொகையை இலங்கைக்கு வழங்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஆசிய அபிவிருத்தி வங்கியும் சுமார் பத்து இலட்சத்து அறுநூறு டொலர்களை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

நான்கு வருடங்களில் 8 தடவைகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கை பெறும் என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறோம். பின்னர் அதே நேரத்தில் நாம் சுமார் பத்து இலட்சம் முந்நூற்று ஐம்பது மில்லியன் டாலர்களைப் பெற வேண்டும். 

ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உத்தரவாதத்தை நாங்கள் எதிர்பார்த்தோம். அவர் மேலும் கூறினார்.

Leave a Reply