சர்வதேச நாணயநிதியத்தின் அங்கீகாரம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்.!SamugamMedia

சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் 20ம் திகதி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உதவி கிடைத்த பின்னர் இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏழு மில்லியன் டொலர் என்பது நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிதியமைப்புகள் மற்றும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்கப்போகின்றது
நாங்கள் அதிகளவு முதலீடுகளிற்கான வாய்ப்புகளை பார்க்கின்றோம் முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள பலர் வாய்ப்புகளிற்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு தொடக்கம் நாங்கள் சரியான பாதையில் பயணிப்போம் நாங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள குறுகிய காலவலிகள் முடிவிற்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply