இலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நான்கு இளைஞர்களின் மரணம்! SamugamMedia

மொனராகலை – வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரினதும் சடலங்களும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்கள்.

கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல்போயிருந்தார்கள்.

அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply