நிலவும் உள்நாட்டு போர்…! சூடானில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!samugammedia

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,

இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை, 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சூடானில் இருந்து இதுவரையில் 19 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் மற்றுமொரு வேறாக இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *