கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.