சர்வதேச விமான நிலையங்களின் வரி சலுகை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

யாழ்ப்பாணம்  சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம்  மற்றும் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த அனுமதியானது நேற்று  கூடிய அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2026.01.30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு (இரத்மலான) திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2025.03.27 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரிக்குரிய சலுகையை முழுமையாக வழங்குவதை 2024.12.29ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *