சமாதானம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுக்காக இந்தியாவைச் சேர்ந்த கிறிஷ்ணா என்பர் இலங்கையைச் சுற்றி துவிச்சக்கர வண்டியில் ஆரம்பித்த பயணம் இன்று திங்கட்கிழமை (20) திருகோணமலை -மூதூரை வந்தடைந்தது.
இவர் இம்மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த பயணத்தை ஆரம்பித்து இன்று 20வது நாளாக மூதூரை வந்தடைந்தார்.
இவரது துவிச்சக்கர வண்டியில் இந்திய தேசியக் கொடி தொங்க விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





