ஊரடங்கு நீக்கப்படுமா? நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகள், இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply