வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை

சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய தனி உரிமையாளராக இருந்தால் ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *