யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர்ப்பந்தல் {சிறாப்பர் மடம்} சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் சுப்பிரமணியர் கதிரவேலு குடும்பத்தின் நேரடி வாரிசுகளும் இணைந்து இந்த தண்ணீர்ப்பந்தல் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பழமைவாய்ந்த பிள்ளையார் சிலை புதன்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஆகம முறைப்படி வைக்கப்படவுள்ளது.






