
சபுகஸ்கந்த பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
குறித்த இடத்துக்கு சென்றுள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.





