பூநகரி, கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயத்தை பாதுகாப்பதற்கான புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்கவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
இவ்வாலயமானது, நாயக்கர் கால கட்டட வடிவத்தை பிரதிபலிப்பதுடன், செண்பகப்பெருமாள் காலத்து ஆலயமாக இதை கருதமுடியும் எனவும், இவ்வாலயத்தை பாதுகாத்து ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பல வரலாற்று தகவல்களை பெறமுடியும் எனவும் வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.






