அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் 1ஆம் திகதி ஆரம்பம்!

2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply