வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்! போக்குவரத்து தடை

கொடதெணியாய, பல்லேகம வீதியின் மாஓய ஊடாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி உடைப்பெடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பெய்த கடும் மழையால் குறித்த பாலம் இவ்வாறு உடைப்பெடுத்துள்ளது.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவனெல்லை, ஹீனடிபல வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது.

Leave a Reply