சாவகச்சேரியின் முன்னாள் நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார்.

தேவசகாயம் பிள்ளை, 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சாவகச்சேரி நகர சபைக்கு போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சபையின் தலைவராக இருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இராணுவ கட்டுப்பாட்டினுள்ள மயிலிட்டி வீதி: புனரமைப்பு செய்யமுடியாத நிலை!

Leave a Reply