மட்டக்களப்பில் 26 பேருக்கு ஜனாதிபதி சாரணர் விருது!

சாரணர் இயக்கத்தின் அதியுயர் விருதான ஜனாதிபதி சாரணர் விருது அணிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் வி.பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு இந்த ஜனாதிபதி சாரணர் விருது அணிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எட்டு பாடசாலைகளைச் சேர்ந்த விருதுக்கு தகுதி பெறும் 26 மாணவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி சாரணர் விருது இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான ஆணையாளரால் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான ஆணையாளர் ஜனபிரிட் பெர்னான்டோ, மாவட்ட அரச அதிபரும், மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் தலைவருமாகிய கே.கருணாகரன், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி, மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியார்கள், கல்விப் புலத்தினர் சாரணர் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு புத்தளம் பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவித்தல்

Leave a Reply