தமிழகத்தில் 8ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகத்தில் இன்று 8ஆவது கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply