இது ஒரு தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டம்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

தாம் எப்போதும் மக்களுக்காகவே நிற்பதாகவும் பதவிகளில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பஸில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டம். இதனால் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களைப் பெற மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியின் கீழ் நாடு மீண்டும் சிறிமாவோ காலத்தின் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே மக்கள் அரசாங்கத்தால் சலிப்படைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா!

Leave a Reply