
ஆடவர்களுக்கான 7ஆவது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஒன்-டவுன் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார்.
மார்டின் கப்தீல் 28 (35), கிளெம் பிலிப்ஸ் 18 (17), ஜேம்ஸ் நீஷம் 13 (7) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 172/4 ரன்கள் சேர்த்தது.
இலத்தை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 53 (38), மிட்செல் மார்ஷ் 77 (50), கிளெம் மேக்ஸ்வெல் 28 (18) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 173/2 ரன்கள் சேர்த்து அபார வெற்றியைப் பெற்றது. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 5 (7) மட்டுமே சொதப்பியிருந்தார்.
இப்போட்டி முடிந்த பிறகு கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது முதலில் ரன்னர் அப் கோப்பை பெற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் வருமாறு வர்ணனை செய்யப்பட்டது.
வில்லியம்சன் என்ற அந்த பெயரை கேட்டதும் அரங்கில் இருந்த பெரும்பாலானோர் எழுந்துநின்று, வில்லியம்சனுக்காக உற்சாக குரல் எழுப்பினர். வில்லிம்சன்தான் உலகக் கோப்பையை வென்றதுபோல் உணர்வு ஏற்படும் அளவுக்கு ரசிகர்களின் செயல் இருந்தது.
ரன்னர் அப் கோப்பை பெற்றப் பிறகு பேசிய வில்லியம்சன், “பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஏற்ற மைதானம். நாங்கள் அடித்தது பெரிய ஸ்கோர் என்று நினைத்துத்தான் பீல்டிங் செய்ய சென்றோம்.
ஆனால், ஆஸ்திரேலிய அணினர் சிறப்பாக சேஸ் செய்தனர். அந்த அணி வீரர்கள் அனைவரும் சிறந்தவர்கள். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு போராடினோம். அவர்கள் எங்களுக்கு ஒரு இடத்தில்கூட வாய்ப்பு கொடுக்கவில்லை” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “எங்கள் அணியினர் போராடிய விதம் சிறப்பாக இருந்தது. அதை நினைத்து பெருமையடைகிறேன். கடுமையாக போராடித்தான் இறுதிப் போட்டி வரை வந்தோம்.
அமீரகத்தில் இருக்கும் மூன்று மைதானங்களும் ஒரேமாதிரி கிடையாது. உண்மையில், ஆஸ்திரேலிய அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி, தோல்வி இரண்டில் ஒன்று சாத்தியம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





