‘அந்த ஒரு நிமிடம்’… கண் கலங்கிய கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள்:

2013ஆம் ஆண்டு நவம்பர் 14-18 வரை இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதுதான் சச்சினுக்கு கடைசி சர்வதேச போட்டியாகும். அவரது 200ஆவது டெஸ்டும் கூட இதுதான். இதனால், இப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒருவர் கூட அரை சதத்தை தொடவில்லை.

கீமோ பௌல் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 80 பந்துகளில் 48 ரன்கள் அடித்திருந்தார். டேரன் பிராவோ (29), சந்தர்பால் (25), டியோநரைன் (21) ஆகியோர் 20+ ரன்கள் அடித்தனர். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 182/10 ரன்கள் சேர்த்தது.

ப்ரக்யான் ஓஜா 5/40 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3/45 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் முரளி விஜய் 43 (55), ஷிகர் தவன் 33 (28) சேர்த்து ஆட்டமிழந்தார்கள். சேத்தேஸ்வர் புஜாரா களத்தில் இருந்தபோது சச்சின், தனது கடைசி இன்னிங்ஸ் விளையாட, வெளியே வந்தார்.

அப்போது வான்கடே மைதானத்தில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் கண் கலங்கினர். தொலைக்காட்சியில் போட்டியை பார்த்தவர்களும்தான். மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் பவுண்டரி லைனில் வரிசையாக நின்று, சச்சினை வரவேற்று மரியாதை கொடுத்தனர்.

இந்த வரலாற்று நிகழ்வு இன்றளவும் மறக்க முடியாததாக இருக்கிறது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சச்சின், புஜார இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்நிலையில் சச்சின் 74 (118) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து புஜாரா 113 (167) ரன்களும், விராட் கோலி 57 (78) ரன்களும் எடுத்து நடையைக் கட்டினார்கள்.

ரோஹித் ஷர்மா 111 (127) ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அஸ்வின் தனது பங்கிற்கு 30 (32) ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில், இந்திய அணி 495/10 ரன்கள் குவித்து அபார முன்னிலை பெற்றது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 187/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply