யாழில் தாராளமான எரிபொருள் கையிருப்பில்; மக்கள் முண்டியடிப்பதை தவிர்க்கவும்! அரச அதிபர் தெரிவிப்பு

யாழ். மாவட்டத்தில் தாராளமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்களை எரிபொருள் நிலையங்களில் திரளவேண்டிய அவசியம் இல்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 20 வீதமான எரிபொருள் மட்டுமே, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்காக பெற்றுக் கொள்ளப்படுகிறது.

யாழ். மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள், தேவையான அளவு கையிருப்பில் உள்ளமையால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடிக்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தாக்கத்தை எதிர்க்கட்சிகள் புரிந்துக்கொள்ளவில்லை! பவித்ரா வன்னியாராச்சி

Leave a Reply