கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்

ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாளொன்றில் சராசரியாக 1,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்பட்டன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.

மேலும், ஒரு வருடத்திற்குள் வெளிநாட்டு கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *