
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவர் கடலில் மூழ்கி காணமல் போன நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொங்கல் தினமன்று கிரான் தேசிய பாடசாலையில் ஓரே வகுப்பில் கல்வி பயிலும் 07 பேர் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று குளித்துள்ளதுடன் இருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கிரான் பிரதான வீதியை சேர்ந்த 16 வயதுடைய ஜீ.சிவானந்தன் பாடசாலை வீதி கிரானைச் சேர்ந்த 16 வயதுடைய ச.அக்சயன் ஆகியோர் கடல் அலையில் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடல் உயிர் பாதுகாப்பு பாடையினர், கல்குடா சுழியோடிகள், மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.