கச்சதீவு திருவிழா: 100 பேருக்கு அனுமதி

யாழ்ப்பாணம், பெப்.22

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இலங்கை பக்தர்கள் 50 பேருக்கும் இந்திய பக்தர்கள் 50 பேருக்கும் மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய தரப்பினரால் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *