சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்ட பல லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேல் மாடி கட்டட வேலைக்காக வைக்கப்பட்ட பொருட்களே இரவோடிரவாக திருடப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் இரவு நேரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் இருந்த நிலையில் வைத்தியசாலையின் பின்புற வாயிலால் உழவு இயந்திரம் மூலம் பொருட்கள் ஏற்றப்பட்டு முன்பக்க வாயில் வழியாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.