நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 490,000ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஆயிரத்து 628 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 490,110 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 354 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply