டொலர் நெருக்கடியால் சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது.

லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுக்கள் இரண்டுமே பற்றாக்குறையாக இருப்பதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையால் எரிவாயுவை இறக்குமதி செய்ய வணிக வங்கிகளிடமிருந்து கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் லாப் கேஸ் எரிவாயுவை மீண்டும் இறக்குமதி செய்ய முடியவில்லை என அதன் தலைவர் எச்.வெகாபிட்டிய இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்

Leave a Reply