ஆனைக்கோட்டை – உயரப்புலத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.
எனினும், அவரது உறவினர்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவரது சடலம் இன்று உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சடலம் மீதான பிரேத உடற்கூற்று பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகன் மேற்கொள்ளவுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.