
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில்தான் பொருள்களுக்கான விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், பொருள்களின் தற்போதைய விலை தொடர்பான பிரச்சினை, கொரோனா நிலைமையின் விளைவாகும். இது உலகளாவிய பிரச்சினை. அரசாங்கத்துக்கு வருவாயைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கான வழிகளை நிதியமைச்சர் எடுத்துக்காட்டினார். எனினும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். – என்று தெரிவித்தார்.