மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை –  சீசெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சீசெல்ஸ் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

வெற்றி பெறும் அணிக்கு வெற்றியாளர் கிண்ணத்துடன் 30 ஆயிரம் அமெரிக்க டொலர் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்ஃபன்டினோ, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்காக, நான்கு நாடுகள் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் இவர் விசேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *