நெடுங்கேணி பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி!

நெடுங்கேணி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முதல் வாசிப்பில் தோல்வியடைந்தது.

நெடுங்கேணிப் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று சபையின் தவிசாளர் சபாரத்தினம் தணிகாசலத்தால் சமர்பிக்கப்பட்டது.

இதன் மீதான வாக்கெடுப்பின்போதே தோல்வியடைந்தது.

இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நெடுங்கேணிப் பிரதேச சபையில் மொத்தம் 26 உறுப்பினர்கள் உள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு சார்பில் 8 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் முன்னணி ஆகியவற்றில் மூவர் என ஆறுபேருமாக 14 உறுப்பினர்கள் தமிழ்க் கட்சிகள் சார்பிலும், பெரமுனவில் ஐவரும், ஜே.வி.பி 01, ஐ.ம.சு.மு. 01, சுதந்திரக் கட்சி.02, ஐ.தே.கட்சி 03 என தேசிய கட்சிகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

இன்றைய வாக்களிப்பில் ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் நடுநிலை வகித்தனர்.

மத்திய அரசினால் முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *