இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மோதியதில், வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தளை, தம்புள்ளை பொலிஸ் பிரிவு ஹபரண வீதி, அவுடங்காவ பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த பஸ்ஸே, பாதசாரி மீது மோதியுள்ளது .
இதனை, பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி அடுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த முதியவர் , உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.