திருகோணமலை – மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மூதூர் பகுதிக்கு உட்பட்ட 58ஆசாத் நகர் மக்கள் குடிநீர் இன்மையால் மிக நீண்ட காலம் பல சொல்லொனா இன்னல்களை எதிர் கொண்டு வந்தனர்.
எனினும், கிணறுகளின் மூலம் கிடைக்கும் குடி நீரும் பாவணைக்கு உதவாததாகவே காணப்பட்டது.
இது தொடர்பில், குறித்த பிரதேச மக்கள் பல அரசியற் தலைமைகளிடமும் பல கோரிக்கைகள் முன்வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இக் கிராம மக்களின் குடி நீர் பிரச்சினை தொடர்பில் அண்மையில் ஊடகங்களிலும் பேசப்பட்டது.
இதனால் அப்பிரதேச மக்கள் நம்பிக்கையீனத்துடன் இருந்த வேளையிலேயே ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப்பிடம் தங்களது பிரச்சினையை முன்வைத்தனர்.
இதையடுத்து 58 ஆசாத் நகர் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான குழாய்கள் பொறுத்தும் நடவடிக்கையில் நேற்று (19) பொதுமக்களுடன் இணைந்து றைஷா மகறூப் ஈடுபட்டுள்ளார்.