அம்பாறையில் கடுமையான பனி மூட்டங்கள்! சிரமத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (21) காலை முதல் கடுமையான பனி மூட்டங்கள் காணப்படுகின்றன

இதனால் வாகன சாரதிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுடன் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் சில இடங்களில் சாரதிகள், வாகனங்களில் வெளிச்சங்களை ஒளிரச் செய்தபடி பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது

குறிப்பாக இந்த பனி மூட்டங்கள் கல்முனை ,நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர் ,சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை ,ஒலுவில் ,போன்ற பிரதேசங்களில் அதிகமாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் காலநிலை மாற்றங்கள் அடிக்கடி மாறுபட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *