
யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் படகு ஒன்றில் இருந்து 227 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, கடலில் சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்றை அவதானித்துள்ளனர். அந்தப் படகைத் தடுத்து சோதனையிட முயன்றபோது, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
படகைச் சோதனையிட்ட கடற்படையினர் 7 மூடைகளில் பொதியிடப்பட்ட கஞ்சாவைக் கைப்பற்றினர். கைற்றப்பட்ட படகும், கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மண்டைதீவுக் கடற்படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று கூறப்படுகின்றது.