
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்திருப்பவர் மாகாபா ஆனந்த்.
இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
தற்போதும் இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் பிரியங்காவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கம் என சொல்லலாம்.
தற்போது இவர் ஒரு எபிசோடு தொகுத்து வழங்க வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது இவர் ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த தகவல் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.