மாவீரர்நாள் தடை மனுவை மல்லாகம் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது!

மாவீரர் தினத்துக்கு தடைகோரி வட்டுக்கோட்டை, இளவாலை, அச்சுவேலி, சுன்னாகம், கோப்பாய், தெல்லிப்பழை, மானிப்பாய் மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஐம்பது பேருக்கு மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி எட்டு பொலிஸ் நிலையங்களால் மல்லாகம் நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான், தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு நியாதிக்கம் இல்லை எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

குறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுபாஸ் ஆகியோர் முன்னிலையாகினர்.

இதேபோன்று, சாவகச்சேரி நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மல்லாகம் சந்தியில் விபத்து: இளைஞன் ஒருவர் காயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *