
தீ காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரை நேற்றைய தினம் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த குறித்த பெண்ணின் கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் மண்ணெண்ணெய்யை எடுத்து தனது தலையில் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இதன்போது கணவன் தன்னிடமிருந்த தீப்பெட்டி மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.